சென்னையில் 161 ரவுடிகள் கைது - போலீஸ் அதிரடி வேட்டை

ஞாயிறு, 26 ஜூன் 2016 (12:56 IST)
சென்னையில் போலீசார் நடத்திய ரவுடிகள் வேட்டையில் 161 பேர் சிக்கினர்.
 

 
சென்னையில், கடந்த சில நாட்களாக, கொலை, கொள்ளை போன்ற அதிபயங்கர குற்றங்கள் பெருகி வருகின்றன. 
 
இந்த நிலையில், சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் ஐடி நிறுவன ஊழியர் சுவாதி என்ற பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சென்னை மட்டும் இன்றி, தமிழகம் முழுக்க பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
 
இதனால்,  கொலை, கொள்ளை குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகளை போலீஸ் வேட்டையாடினர். இதில் 161 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்