தமிழகத்தில் 16 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்: எந்த மாவட்டத்திற்கு யார்?

புதன், 17 மே 2023 (07:52 IST)
நிர்வாக வசதிக்காகவும் விருப்பத்தின் பெயரிலும் அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று திடீரென 16 மாவட்டத்திற்கு புதிய கலெக்டர்களை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு உள்ளார். இதனை அடுத்து புதிய எந்தெந்த மாவட்டத்திற்கு யார் யார் கலெக்டர்கள் என்பதை தற்போது பார்ப்போம்
 
*நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் கடலூர் கலெக்டராக நியமனம். 
 
*அரியலூர் கலெக்டராக அன்னீ மேரி ஸ்வர்னா நியமனம்
 
*கிருஷ்ணகிரி கலெக்டர் தீபக் ஜேகப் தஞ்சை கலெக்டராக நியமனம்
 
*புதுக்கோட்டை கலெக்டராக மெர்சி ரம்யா நியமனம்
 
*நாமக்கல் கலெக்டராக உமா நியமனம் 
 
*காஞ்சி கலெக்டராக கலைச்செல்வி மோகன் நியமனம்
 
*செங்கல்பட்டு கலெக்டராக கமல் கிஷோர் நியமனம்
 
*மதுரை கலெக்டராக சங்கீதா நியமனம்
 
*சிவகங்கை கலெக்டராக ஆஷா அஜித் நியமனம்
 
*ராமநாதபுரம் கலெக்டராக விஷ்னு சந்திரன் நியமனம்
 
*தூத்துக்குடி கலெக்டராக ராகுல்நாத் நியமனம்
 
*திருப்பூர் கலெக்டராக கிருஸ்துராஜ் நியமனம்
 
*ஈரோடு கலெக்டராக ராஜ கோபால் சுங்கரா நியமனம்
 
திண்டுக்கல் கலெக்டராக பூங்கொடி நியமனம்
 
*நாகை கலெக்டராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம் * கிருஷ்ணகிரி கலெக்டராக சராயு நியமனம்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்