இந்நிலையில் தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி வெளியான தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு சட்டசபை தேர்தலால் சற்று தாமதம் அடைந்துள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா கூறுகையில், மே மாதம் முதல் வாரத்தில் தேர்வு முடிகள் வெளியிட தேர்வு துறை முடிவு செய்துள்ளதாகவும், தேர்வு முடிவு வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.