அசானி புயல் எதிரொலி: சென்னையில் இருந்து இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து!

செவ்வாய், 10 மே 2022 (10:33 IST)
அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த புயல் ஆந்திரா மற்றும் ஒரிசா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு மாநிலத்திலும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
 
இந்த நிலையில் அசானி புயல் காரணமாக இன்று காலை முதல் சென்னையில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து ஹைதராபாத், மும்பை, விசாகப்பட்டின,ம் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்