சுற்றுச்சூழல் அதிகாரி இல்லத்தில் இருந்து கோடிக்கணக்கில் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

செவ்வாய், 15 டிசம்பர் 2020 (10:38 IST)
சுற்றுச்சூழல் அதிகாரி இல்லத்தில் இருந்து கோடிக்கணக்கில் பறிமுதல்
லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவ்வப்போது அரசு அலுவலகங்களில் அதிரடியாக சோதனை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது தெரிந்தது. அந்த வகையில் நேற்றும் ஒரு சில அரசு அலுவலகங்களில் சோதனை நடத்திய நிலையில் இன்று திடீரென சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியன் என்பவரின் இல்லத்தில் அதிரடியாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்தனர் 
 
இன்று சென்னையில் உள்ள பாண்டியன் இல்லத்தில் சோதனை செய்ததில் அவரது இல்லத்திலிருந்து ரூபாய் 1.37 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மேலும் சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியன் வீட்டில் 3 கிலோ தங்க நகைகள் மற்றும் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் மேலும் வைரம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் செய்து வருவதாகவும் மேலும் சில ஆவணங்கள் அவரது இல்லத்தில் இருந்து பறிமுதல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரங்கள் கூறுகின்றன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்