கேரள மாநிலம் கண்ணனுாரை சேர்ந்தவர் சைனேஷ். கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவர் தொழிலுக்கு தேவையான எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்க கோவையை சேர்ந்த கனகராஜ் என்பவர் மூலம் திருச்சியில் உள்ள ராஜேஷை சந்திக்க சென்றனர். சைனேசுடன் அவருடைய நண்பர்கள் கனகராஜ், சஞ்சீவ், ரவி, சார்ஜித் ஆகிய ஐந்து பேரும் காரில் திருச்சி சென்றனர். அவர்களை சந்தித்த ராஜேஷ், "திருச்சியை விட கோவையிலேயே விலை குறைவாக பொருட்களை வாங்கலாம் எனக்கூறி வந்தவர்களை திருப்பி அனுப்பியுள்ளார்.