சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, மக்கள் நலப் பணியாளர்கள் சென்னையில் இன்று பிரமாண்ட பேரணி நடத்தினர்.
இந்த பேரணியில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த சுமார் இரண்டாயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பணி மீண்டும் வழங்கப்படாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், உடனடியாக இந்த விஷயத்தில் தமிழக அரசு உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த பேரணியில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணியும் கலந்து கொண்டார்.