மின்வெட்டுக்கு மூலக்காரணம் ஜெயலலிதா தான் : ஆற்காடு வீராசாமி
புதன், 18 மார்ச் 2009 (16:44 IST)
மின் உற்பத்தியைப் பெருக்க தமிழக அரசு எதுவும் செய்யவில்லை என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாற்று உண்மைக்கு மாறானது என்று தெரிவித்துள்ள மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மின் திட்டங்களைத் தொடங்கியிருப்பாரேயானால், தற்போது தமிழகத்தில் மின்வெட்டு வந்திருக்காது என்றும் இப்போதுள்ள மின்வெட்டுக்கு மூலக்காரணம் ஜெயலலிதாதான் என்றும் குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா 14ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வழக்கறிஞர்கள் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி கேள்வி கேட்டதாகவும், அதற்கெல்லாம் கருணாநிதி பதிலளிக்காமல், வசைமாரி பொழிவதை நிறுத்தவில்லை என்று அவர் கூறியதற்கு மட்டும், வசைமாரி பொழிவது யார் என்ற தலைப்பில் பதில் அளித்திருப்பதாகவும் 17ஆம் தேதிய அறிக்கையிலே சொல்லியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் 14.3.09 தேதிய அறிக்கையில் 'மின் வெட்டு' பற்றி கேட்டதற்கு கருணாநிதி பதிலளிக்கவில்லை என்கிறார். மின்வெட்டு பிரச்சனை குறித்து ஜெயலலிதா எழுதாத நாள் இல்லை. அமைச்சர் என்ற நிலையில் பலமுறை அதற்கெல்லாம் நான் விளக்க மளித்துவிட்டேன். அதையெல்லாம் படிக்காமல் பதில் அளிக்கவில்லை என்கிறார் ஜெயலலிதா. இதோ விளக்கமான பதில்.
ஜெயலலிதா அறிக்கையில் மின்சார உற்பத்தியை பெருக்க கழக அரசு எதுவும் செய்யவில்லை என்றும், மின்துறை அமைச்சர், முதலமைச்சர் கருணாநிதிக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருப்பதாகவும் தனக்கே உரிய அரசியல் நாகரீகத்தோடு சொல்லியிருக்கிறார்.
1. தி.மு.க. 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு தான் செய்யூரில் 4000 மெகாவாட் சூப்பர் தெர்மல் ஸ்டேஷன், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பஷேன் மூலம் அமைப்பதற்கு மின்துறை அமைச்சரான நான் முழு முயற்சி செய்து, இப்போது நில ஆர்ஜிதம் முடியும் தருவாயில் உள்ளது.
2. வடசென்னையில் 1200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு 2.7.07 அன்று முதலமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டி, பாரதமிகு மின் நிறுவனத்திற்கு பணிகள் ஒப்படைக்கப்பட்டு, கட்டமைப்பு வேலைகள் நடந்து வருகின்றன. முதல் பிரிவு 600 மெகாவாட், 2010 அக்டோபரிலும், இரண்டாவது பிரிவு 2011ஆம் ஆண்டு மே திங்களில் மின்உற்பத்தி தொடங்கும்.
3. மேட்டூரில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டம் 2.7.07 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. 2011 மே திங்களில் மின்உற்பத்தி தொடங்கும்.
4. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் மூலம் 1600 மெகாவாட் அளவில் மின்உற்பத்தி செய்ய பெரம்பலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் மின்துறை முயற்சி எடுத்து அதிலும் நில ஆர்ஜிதம் முடியும் அளவில் உள்ளது.
5. தமிழ்நாடு மின்சார வாரியமும், என்.டி.பி.சி. நிறுவனமும் இணைந்து முதற்கட்டமாக 1000 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது கட்டமாக மேலும் 500 மெகாவாட் மின்சாரமும் தயாரிக்க 5.9.07 அன்று என் தலைமையில் மத்திய மின்துறை அமைச்சர் ஷிண்டே அடிக்கல் நாட்டி, கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2010 ஆம் ஆண்டு அக்டோபரில் மின்உற்பத்தி துவங்கும்.
6. தமிழ்நாடு மின்சார வாரியமும், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும் இணைந்து 1000 மெகாவாட் மின்சார உற்பத்தியை தொடங்க தூத்துக்குடியில் 26.2.09 அன்று என் தலைமையில் மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டி கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. மார்ச் 2012ல் உற்பத்தி தொடங்கும்.
7. தமிழ்நாடு மின்சார வாரியமும், பி.எச்.ஈ.எல். நிறுவனமும் இணைந்து உடன்குடியில் 1600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு 22.2.09 அன்று மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தலைமையில் தமிழக மின்துறை அமைச்சரான நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். மார்ச் 2013இல் மின் உற்பத்தி தொடங்கும்.
8. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் அருகே 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு ஆக்கப்பணிகள் தொடங்கவுள்ளன.
9. நீலகிரி மாவட்டத்தில் குந்தா நீரேற்று புனல் மின்திட்டம் 500 மெகாவாட்- தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக நிறுவப்படவுள்ளது.
எனவே மின் உற்பத்தியைப் பெருக்க இந்த அரசு எதுவும் செய்யவில்லை என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாற்று உண்மைக்கு மாறானது என்பதை இந்தப்புள்ளி விவரங்கள் நிரூபிக்கும். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற திட்டங்களைத் தொடங்கியிருப்பாரேயானால், தற்போது தமிழகத்தில் மின்வெட்டு வந்திருக்கவே வந்திருக்காது. எனவே இப்போதுள்ள மின்வெட்டுக்கு மூலக்காரணம் ஜெயலலிதா தான்.
ஜெயலலிதா தனது அறிக்கையில் நான் மின்உற்பத்தி பணிகளைக் கவனிக்காமல், முதலமைச்சர் கருணாநிதிக்கு எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லியிருக்கிறார். தனது 85 வயது வரை தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு முதுபெரும் தலைவருக்கு ஜெயலலிதா கூறியிருப்பதைக் போல நான் எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்றால், அதனை நான் என் வாழ்வில் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன்.
ஆனால் கருணாநிதியை பொறுத்தவரை அவரே தான் தன் வேலைகளை செய்து கொள்வாரே தவிர, தனக்கு யாரும் எடுபிடி வேலை பார்ப்பதை அவரே விரும்பமாட்டார். நான் மின்துறை பணிகளை முறையாகச் செய்து வருகிறேன் என்பதற்கான பட்டியலை மேலே குறிப்பிட்டுள்ளேன். ஆனால் என்னை எடுபிடி என்று கூறியுள்ள ஜெயலலிதா இன்று யாருக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கிறார்? யாரோ ஒரு உடன் பிறவா சகோதரிக்கும், அவருடைய கும்பத்தினருக்கும் ஒவ்வொரு நாளும் எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கின்ற நிலையில், கண்ணாடி வீட்டிலே இருந்து கொண்டு என் மீது கல்வீசிட முற்படலாமா?
5. தமிழ்நாடு மின்சார வாரியமும், என்.டி.பி.சி. நிறுவனமும் இணைந்து முதற்கட்டமாக 1000 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது கட்டமாக மேலும் 500 மெகாவாட் மின்சாரமும் தயாரிக்க 5.9.07 அன்று என் தலைமையில் மத்திய மின்துறை அமைச்சர் ஷிண்டே அடிக்கல் நாட்டி, கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2010 ஆம் ஆண்டு அக்டோபரில் மின்உற்பத்தி துவங்கும்.
6. தமிழ்நாடு மின்சார வாரியமும், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும் இணைந்து 1000 மெகாவாட் மின்சார உற்பத்தியை தொடங்க தூத்துக்குடியில் 26.2.09 அன்று என் தலைமையில் மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டி கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. மார்ச் 2012ல் உற்பத்தி தொடங்கும்.
7. தமிழ்நாடு மின்சார வாரியமும், பி.எச்.ஈ.எல். நிறுவனமும் இணைந்து உடன்குடியில் 1600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு 22.2.09 அன்று மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தலைமையில் தமிழக மின்துறை அமைச்சரான நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். மார்ச் 2013இல் மின் உற்பத்தி தொடங்கும்.
8. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் அருகே 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு ஆக்கப்பணிகள் தொடங்கவுள்ளன.
9. நீலகிரி மாவட்டத்தில் குந்தா நீரேற்று புனல் மின்திட்டம் 500 மெகாவாட்- தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக நிறுவப்படவுள்ளது.
எனவே மின் உற்பத்தியைப் பெருக்க இந்த அரசு எதுவும் செய்யவில்லை என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாற்று உண்மைக்கு மாறானது என்பதை இந்தப்புள்ளி விவரங்கள் நிரூபிக்கும். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற திட்டங்களைத் தொடங்கியிருப்பாரேயானால், தற்போது தமிழகத்தில் மின்வெட்டு வந்திருக்கவே வந்திருக்காது. எனவே இப்போதுள்ள மின்வெட்டுக்கு மூலக்காரணம் ஜெயலலிதா தான்.
ஜெயலலிதா தனது அறிக்கையில் நான் மின்உற்பத்தி பணிகளைக் கவனிக்காமல், முதலமைச்சர் கருணாநிதிக்கு எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லியிருக்கிறார். தனது 85 வயது வரை தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு முதுபெரும் தலைவருக்கு ஜெயலலிதா கூறியிருப்பதைக் போல நான் எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்றால், அதனை நான் என் வாழ்வில் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன்.
ஆனால் கருணாநிதியை பொறுத்தவரை அவரே தான் தன் வேலைகளை செய்து கொள்வாரே தவிர, தனக்கு யாரும் எடுபிடி வேலை பார்ப்பதை அவரே விரும்பமாட்டார். நான் மின்துறை பணிகளை முறையாகச் செய்து வருகிறேன் என்பதற்கான பட்டியலை மேலே குறிப்பிட்டுள்ளேன். ஆனால் என்னை எடுபிடி என்று கூறியுள்ள ஜெயலலிதா இன்று யாருக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கிறார்? யாரோ ஒரு உடன் பிறவா சகோதரிக்கும், அவருடைய கும்பத்தினருக்கும் ஒவ்வொரு நாளும் எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கின்ற நிலையில், கண்ணாடி வீட்டிலே இருந்து கொண்டு என் மீது கல்வீசிட முற்படலாமா?
இந்தப் பிரச்சனையில் ஜெயலலிதாவிற்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருக்குமேயானால்-அ.தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் எல்லாம் உடனடியாக நீதிமன்றத்திற்கு பணிக்குத் திரும்ப வேண்டுமென்று அறிக்கை விடலாமே! பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவதைப்போல அறிக்கை விடுவதால் மக்கள் ஏமாந்து விடமாட்டார்கள்.
மாநில நிர்வாகம் பின்னுக்குத் தள்ளப்படவில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி ஏற்கனவே பதில் கூறியிருக்கிறார். சட்டக்கல்லூரி ஆறு மாதமாக மூடிக்கிடக்கிறது என்றார். அதுவும் தவறான விவரம் என்று புள்ளி விவரத்தோடு முதலமைச்சர் கருணாநிதி தேதிவாரியாக பதில் அளித்தார்.
அதன் பின்னர், அதைப்பற்றி ஜெயலலிதா வாய்திறக்கவில்லை. அதையெல்லாம் விட்டு விட்டு, முதலமைச்சர் கருணாநிதி வசைமாரி பொழிகிறார் என்று ஜெயலலிதா குறை கூறிய காரணத்தால், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டி, ஜெயலலிதா எந்தெந்த தேதியில் எந்தெந்த வார்த்தைகளால் வசைமாரி பொழிந்தார் என்பதை முதலமைச்சர் தேதிவாரியாக பட்டியலிட்டுக் காட்டி, யார் வசைமாரி பொழிகிறார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்களே புரிந்து கொள்ளட்டும் என்று எழுதியிருந்தார்.
அதற்குப் பிறகும் ஜெயலலிதா-தன்னைத் திருத்திக் கொள்ளவோ, மாற்றிக் கொள்ளவோ முன்வராமல், முதலமைச்சர் கருணாநிதி அறிக்கைகளிலே எழுதாத வார்த்தைகளையெல்லாம் அவர் எழுதியதாக பச்சைப் பொய்யைச் சொல்லியிருக்கிறார்.
மூக்கறுந்து போன மூளி- அலங்காரி-நாக்கறுந்து தொங்குகின்ற நரி-நாலாந்தரப் பெண்-மகுடம் பறி கொடுத்த மாயராணி- செப்படி வித்தை மாமி-மலம்- வேஷக்காரி-தெருப்பொறுக்கி-நாய்க்கொழுப்பு- பூதகி-நாய்-திமிங்கலம் என்ற வார்த்தைகளால் முதலமைச்சர் கருணாநிதி, ஜெயலலிதாவை வசைமாரி பொழிந்ததாக ஜெயலலிதா தன் அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறார் என்றால், தமிழ்நாட்டு மக்களே அன்றாடம் முதலமைச்சரின் அறிக்கைகளைப் படித்து வரும் பத்திரிகையாளர்களே-முதல்வரின் அறிக்கைகளிலே அந்த அம்மையாரை இப்படிப்பட்ட வார்த்தைகளால் எப்போதாவது வர்ணித்திருக்கிறாரா என்பதை நீங்களே கூறுங்கள்.
ஜெயலலிதா எழுதியுள்ள அறிக்கையில் அவரைப்பற்றி முதலமைச்சர் கூறாத ஆனால் ஜெயலலிதாவே கூறிக்கொண்டுள்ள ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள் எப்படிப்பட்டவை என்பதை நாமல்ல, நாடே அறியும் என்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.