பொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம்

ஞாயிறு, 2 மே 2010 (12:38 IST)
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப் படிவங்கள் மே 3 ஆம் தேதி ( நாளை ) முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 58 மையங்களில் விண்ணப்ப படிவங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. இதுவருகிற 29 ஆம் தேதி வரை நடைபெறும். விண்ணப்ப் படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க கடைசி நாள் மே 31 ம் தேதியாகும்.

ஜூன் 28 ஆம் தேதி கவுன்சிலிங் தொடங்குகிறது.ஜூலை 25 வரை கவுன்சிலிங் நீடிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்