பதட்டமான சென்னை வாக்குச் சாவடிகளில் மத்தியப் படையினர்

வரும் 13ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களுக்காக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வரும் மத்திய அரசு சென்னையில் உள்ள பதட்டமான 150 அல்லது 160 வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பிற்காக மத்திய துணை ராணுவப்படையினரை நிறுத்தவுள்ளது..

வாக்குச் சாவடிகளை பார்வையுற்ற காவல்துறை ஆணையர் கே.ராதாகிருஷ்ணன் பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில் தேர்தல் நாளில் இந்த படையினர் கூடுதல் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றார்.

தமிழகத்தில் உள்ள 53,000 வாக்குச் சாவடிகளில் சுமார் 10 விழுக்காடு வாக்குச் சாவடிகள் பதட்டம் நிறைந்தவை என்று சமீபத்தில் அரசு தகவல்கள் தெரிவித்திருப்பதால் இந்த வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள இடங்களில் பாதுகாப்பு 3 மடங்கு அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்