நீர்த்துப்போன அமெரிக்க தீர்மானம் - கருணாநிதி

வெள்ளி, 22 மார்ச் 2013 (11:04 IST)
FILE
ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்தியா தெரிவித்த கருத்து திருப்தி அளிப்பதாக இல்லை என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தி.மு.க.தலைவர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தாங்கள் அமெரிக்க தீர்மானத்தில் எவையெவை இடம்பெற வேண்டும் என்று எடுத்துச்சொன்னமோ, அறிவித்தமோ அவற்றில் எதுவுமோ இடம்பெறவில்லை என்றார்.

அதனால் இது நீர்த்துப்போன அமெரிக்க தீர்மானம் என்றுதான் சொல்லவேண்டும், குறிப்பிட்ட காலவரைக்குள் சுதந்திரமான விசாரணை நடைபெற்று அவற்றின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லியிருக்கிறோம், அதை பிரதமருக்கு எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன் என்றார்.
மேலும் சோனியாகாந்திக்கு எழுதிய கடிதத்திலுமத் சுட்டிக்காட்டி அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இனப்படுகொலை நடைபெற்றதை மூடி மறைக்கக்கூடாது என்று சுட்டிக்காட்டியதையும் கருணாநிதி நினைவு கூர்ந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்