நீதிக் கட்சி நூற்றாண்டு விழா: திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து

வியாழன், 19 நவம்பர் 2015 (22:36 IST)
நீதிக் கட்சியின் நூற்றாண்டு விழாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நூற்றாண்டு விழாவின் அனைத்து நிகழ்வுகளும் திராவிட இயக்கத்திற்கு மேலும் புகழும் பெருமையும் சேர்த்திடும் வகையிலும், திராவிட இயக்கத்தின் மைய கருத்தோட்டங்களை இன்றைய இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்கும் முறையிலும், நடைபெறும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.
 
இந்த விழாவினை முன்னிட்டு, வெளிவரும் சிறப்பு மலர் தன்மான - சுயமரியாதை - சீர்திருத்தக் கருத்துகளைத் தாங்கி என்றென்றும் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய பெட்டகமாக வெளிவர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்