த‌மிழக மீனவர்கள் 4 பே‌ர் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு!

திங்கள், 1 டிசம்பர் 2008 (22:50 IST)
சி‌றில‌ங்க கடற்படையால் ‌பிடி‌த்து‌ச் செ‌ல்ல‌ப்ப‌ட்ட ராமே‌ஸ்வர‌த்தை‌ச் சே‌ர்‌ந்த 4 ‌மீன‌வ‌ர்க‌‌ள் யா‌ழ்‌ப்பாண‌ம் ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர்.

ராமே‌ஸ்வர‌த்தை‌ச் சே‌ர்‌ந்த சுந்தர், காளிமுத்து (வயது40), ராமமூர்த்தி(45), கோவிந்தராஜ்(40) ஆகிய 4 மீனவர்க‌ள் கடந்த 22ஆ‌ம் தேதி ‌விசை‌ப்பட‌கி‌ல் கடலு‌க்கு‌ள் ‌மீ‌ன்‌ ‌பிடி‌க்க‌ச் செ‌ன்றன‌ர். அவ‌ர்களகட‌ல் எல்லையை தாண்டி வ‌ந்து மீன் பிடித்ததாக‌க் கூறி ‌சி‌றில‌ங்க கடற்படையினர் கைது செ‌ய்து நெடுந்தீவு காவ‌ல்துறை‌ வச‌ம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் அ‌ந்த 4 மீனவர்களும் இன்று யாழ்ப்பாணம் கெய்ட்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவ‌ர்க‌ளிட‌ம் விசாரணை நட‌த்‌திய ‌நீ‌திப‌தி, வருகிற 5ஆ‌ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்