உயர் நீதிமன்றத்தில் புகுந்து வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்த காரணமாக இருந்த காவல்துறை துணை ஆணையர் விசுவநாதன், இணை ஆணையர் ராமசுப்பிரமணியன் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 19ஆம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே பயங்கர தோதல் நடந்தது. இந்த மோதல் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் முகோபாத்யாயா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.