டெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவட்ட மக்கள் பீதி
திங்கள், 21 மே 2012 (13:32 IST)
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் நெல்லை மருத்துவமனையில் இன்று உயிரிழந்தை தொடர்ந்து இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பக்கத்து மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களுக்கும் டெங்கு நோய் பரவி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நேற்று வரை 30 பேர் பேர் பலியாகியுள்ளனர். வேம்பார் அருகே உள்ள சிப்பிகுளத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை பியானி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது.
நேற்றிரவு குழந்தை பியானி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். இதனால் டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
பாளை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் 155 குழந்தைகள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்னர். இதில் 110க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள். டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 3 வார்டுகளில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.