அ.இ.அ.தி.மு.க கூட்டணி வென்றால் ஜெயலலிதாதான் முதலமைச்சர் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தெற்குத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் கே.தங்கவேல் ஆகியோரை ஆதரித்து பேசிய விஜயகாந்த் இதனை தெரிவித்தார்.
இப்போது, அ.இ.அ.தி.மு.க கூட்டணி வென்றால் முதலமைச்சர் யார் என்று கேட்டுள்ளார். விஜயகாந்த் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை. அதனால் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதாதான் முதலமைச்சர் என்பதை எத்தனை முறை வேண்டுமானாலும் கூறுவேன் என்றார் விஜயகாந்த்.
மக்களின் தேவைகளை அ.இ.அ.தி.மு.க முழுமையாக நிறைவேற்றும் என்றும் வரும் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் பேசினார்.