சென்னையில் தீ விபத்து: 40 குடிசைகள் எரிந்து நாசம்

திங்கள், 2 ஜூலை 2012 (20:42 IST)
சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள பாரதியார் நகரில் அமைந்துள்ள ஒரு வீட்டில் திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் சிலிண்டர் வெடித்த வீடு மட்டும் தீ பிடித்து எரிந்துள்ளது.

சற்று நேரத்தில் அருகிலிருந்த குடிசைகளுக்கும் தீ மளமளவென பரவியது. சுமார் 40 குடிசைகள் இந்த தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளன.

உடனடியாக தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

5 தீயணைப்பு வண்டிகளில் வந்துள்ள வீரர்கள் வேறு குடிசைகளுக்கு பரவாமல் தீயை அணைப்பதற்காகப் போராடி வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்