கூடங்குளத்தில் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு தீர்மானம்

வியாழன், 1 மார்ச் 2012 (01:52 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் மத்திய குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி., தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகி உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளால் அமைக்கப்பட்ட இரண்டு நிபுணர் குழுக்களின் அறிக்கைகளை பரிசீலித்து கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தியை துவங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய-மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்