மாரடைப்பால் மரணம் அடைந்த கவிஞர் வாலியின் மனைவி திலகத்தின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
கவிஞர் வாலியின் மனைவி ரமண திலகம். அவருக்கு வயது 65. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவன்யூவில் உள்ள வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு நேற்று மரணம் அடைந்தார்.
மரண் அடைந்த ரமண திலகம் உடலுக்கு மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், நடிகர் சோ உள்பட ஏராளமானோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
ரமண திலகம் உடல் தகனம், இன்று காலை 10 மணிக்கு சென்னை பெசன்ட்நகர் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கவிஞர் வாலி- ரமண திலகம் தம்பதிக்கு பாலாஜி என்ற மகன் இருக்கிறார்.