கனமழையால் தஞ்சை, நாகை உள்பட 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
புதன், 1 டிசம்பர் 2010 (09:14 IST)
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை நீடிப்பதால் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் தஞ்சை, நாகை, கடலூர், திருவாரூர், கரூர், காரைக்கால், திருச்சி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.