கண்ணாடி வீரியன் பாம்‌பி‌ன் ‌விளையா‌ட்டு (பட‌ங்க‌‌ள்)

வியாழன், 18 அக்டோபர் 2012 (15:59 IST)
webdunia photo
WD
ஈரோடு அருகே விவசாயி கிணற்றில் இருந்த கண்ணாடி வீரியன் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

webdunia photo
WD
ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே உள்ளது வடவள்ளி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னா (40) விவசாயி. நேற்று இவருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு பெரிய நீளமான கண்ணாடி வீரியன் பாம்பு இருந்தது தெரியந்தது. உடனே இது குறித்து ரேஞ்சர் சண்முகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

webdunia photo
WD
உடனே வனஉயிரியல் மற்றும் இயற்கை பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த கார்திக் (28) என்பவர் விவசாயி பிரச்சனாவின் கிண‌ற்‌றி‌‌ற்கு சென்று அங்கு இருந்த விஷம் அதிகம் கொண்ட கண்ணாடி வீரியன் பாம்பை குச்சி வைத்து இடுக்கியில் பிடித்து சாக்குபையில் போட்டார்.

webdunia photo
WD
பின் இந்த கண்ணாரி வீரியன் பாம்பை சத்தியமங்கலம் வனப்பகுதி பண்ணாரி அருகே உள்ள வனக்குட்டை பகுதியில் வனத்தில் விட்டனர். கண்ணாடி வீரியன் பாம்பை அச்சமின்றி பிடித்த கார்த்திக்கை அப்பகுதி மக்கள் பாராட்டி வியந்தனர்.

webdunia photo
WD

வெப்துனியாவைப் படிக்கவும்