எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 17ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 15 அரசு மருத்துவக் கல்லூரிகள், 4 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி..பிஎஸ், பி.டி.எஸ் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை மாதம் நடக்கிறது.
இதற்கான விண்ணப்பம் இன்று முதல் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் வினியோகம் செய்யப்படுகிறது. விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் பெறலாம்.
சென்னையில் எம்.எம்.சி, கே.எம்.சி, ஸ்டான்லி ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 17ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வித் துறை அறிவித்துள்ளது.