உயிரிழந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு ஜெயலலிதா நிதியுதவி
திங்கள், 2 ஏப்ரல் 2012 (16:56 IST)
FILE
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவல் துறையினரின் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்க முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ராமதாஸ் 28.3.2012 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்தஜெயராமன் 10.3.2012 அன்று வாகன விபத்து ஏற்பட்டு, பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம், குமாரபாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்த கணேசன் 4.3.2012 அன்று பணியில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி உட்கோட்டம், சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்த கஜேந்திரன் 2.3.2012 அன்று வாகன விபத்து ஏற்பட்டு, பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
மதுரை மாநகர் ‘கியு’ பிரிவு, புலனாய்வுத்துறையில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த தினகரன் 16.3.2012 அன்று புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சிறுகனூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வந்த மணிமாறன் 25.2.2012 அன்று ரோந்து பணியின் போது விபத்து ஏற்பட்டு, பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
சென்னை, அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வந்த சுப்பிரமணியபிள்ளை 14.3.2012 அன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
காலமான ராமதாஸ், ஜெயராமன், கணேசன், கஜேந்திரன், தினகரன், மணிமாறன் மற்றும் சுப்பிரமணியபிள்ளை ஆகியோரின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். , என தெரிவித்துள்ளார்.