அழ‌கி‌ரி, ‌சித‌ம்பர‌ம் வெ‌ற்‌றியை எ‌தி‌‌ர்‌த்த வழ‌க்கு ‌‌விசாரணை‌க்கு ஏ‌ற்பு

புதன், 8 ஜூலை 2009 (12:28 IST)
தி.மு.க. நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் மு.க.அழ‌கி‌ரி, டி.ஆ‌ர்.பாலு, கா‌ங்‌கிர‌ஸ் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ப.‌சித‌ம்பர‌ம், நாராயணசா‌மி, அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் குமா‌ர் ஆ‌கியோ‌‌ரி‌ன் வெ‌ற்‌றியை எ‌தி‌ர்‌த்து தொடர‌ப்ப‌ட்ட வழ‌க்‌கினை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌விசாரணை‌க்கு ஏ‌ற்று‌‌ள்ளது.

மதுரை நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் மு.க.அழ‌கி‌ரி வெ‌ற்‌‌றியை எ‌தி‌ர்‌த்து மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியை சே‌ர்‌ந்த மோக‌னு‌ம், ஸ்ரீபெரு‌ம்புதூ‌ர் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் டி.ஆ‌ர்.பாலு வெ‌ற்‌றியை எ‌தி‌‌ர்‌த்து பா.ம.க.வை சே‌ர்‌ந்த ஏ.கே.மூ‌ர்‌த்‌தியு‌ம் செ‌ன்னை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழ‌க்கு தொட‌‌ர்‌ந்‌திரு‌ந்தன‌ர்.

இதேபோ‌ல் ‌சி‌வக‌‌ங்கை நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ப.‌சித‌ம்பர‌ம் வெ‌ற்‌றியை எ‌தி‌ர்‌த்து அ.இ.அ.‌தி.மு.க.வை சே‌ர்‌ந்த க‌ண்ண‌ப்பனு‌ம், புது‌ச்சே‌ரி நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் நாராயணசா‌மி வெ‌ற்‌றியை எ‌தி‌ர்‌த்து பா.ஜ.க.வை சே‌ர்‌ந்த விஸ்வேஸ்வர‌னு‌ம் வழ‌க்கு தொட‌‌ர்‌ந்‌திரு‌ந்தன‌ர்.

மேலு‌ம் ‌திரு‌ச்‌சி நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ‌பி.குமா‌ர் வெ‌ற்‌‌றியை எ‌தி‌ர்‌த்து கா‌ங்‌கிரசை சே‌‌ர்‌ந்த சாருபாலா தொ‌ண்டமானு‌ம் வழ‌‌க்கு தொட‌ர்‌ந்து‌ள்ளா‌ர்.

இ‌ந்த வழ‌க்குக‌ள் அனை‌த்தையு‌ம் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌விசாரணை‌க்கு ஏ‌ற்று‌‌க் கொ‌ண்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்