இதையடுத்து ராமச்சந்திரன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாவட்டச் செயலாளர் நாகராஜ ரெட்டி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் அவரது சகோதரர் வரதராஜன், மாமனார் லகுமய்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் சிறையில் உள்ள ராமச்சந்திரனை இந்த வழக்கு தொடர்பாக கைது செய்த போலீசார், கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.
தற்போது பதிவான வழக்குடன் சேர்த்து, ராமச்சந்திரன் மீது இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.