இடிபாடுகளில் இருந்து... (கவிதை)

சனி, 29 ஆகஸ்ட் 2015 (12:34 IST)
மக்களுக்குப் பனனுள்ளசக்தி வாய்ந்த கவிதையைப் படைப்பது குறித்து, கவிஞர்களுக்குச் சொல்லும் விதமாக கார்லோஷ் காஷரெங் எழுதியுள்ள கவிதை.



கவிதையின் வரிகளுக்கு இடையே
வெடிகுண்டு ஒன்றை வையுங்கள்
அவை வெடித்துச் சிதறட்டும்,
அந்த அதிர்வலைகளுக்கு இடையில்
கவிதையை
தொடர்ந்து எழுதுங்கள்
அந்தக் கவிதைக்குத் தேவையானவை அனைத்தும்
அந்த இடிபாடுகளில் இருந்தே கிளர்ந்து எழும்...

 
 - கார்லோஷ் காஷரெங்
தமிழில் - சுரேஷ் வெங்கடாசலம்
 
கவிஞரும் போராளியுமான கார்லோஷ் காஷரெங் குவாதமாலாவைச் சேர்ந்தவர். இவர் கொடுங்கோன்மைக்கும், ஒடுக்கு முறைக்கும் எதிராகப் போராடியவர். இவரது கவிதைகள் சமூக அநீதிக்கு எதிராகப் போராடும் அனைவருக்கும் ஊக்கு சக்தியாகத் திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்