அமெரிக்காவில் இந்திய மாணவி ஒருவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அபர்னா ஜினாகா (24). இவர் சியாட்டிலில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றிக் கொண்டு அங்குள்ள கல்வி நிறுவனத்தில் எம்.எஸ். படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் இருந்த அபர்னா ஜினாகா துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.