சும்ப நிசும்பர்கள் அனுப்பும் தூதுவன் வந்து சொல்வதை அன்னை சுகாசனத்தில் வீற்றிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
மஹிஷாசுர வதத்திற்கு பிறகு ஒரு சமயம், சும்பன், நிசம்பன் என்ற இரு அசுரத் தலைவர்கள் தேவர்களுக்கு பெரும் தொல்லை விளைவித்தனர். தேவர்களும், முனிவர்களும் சென்று, விஷ்ணு மாயையாகிய தேவியை பல வாசம் துதித்து சிவசக்தியாகிய பார்வதி தேவியைச் சரணடைந்தனர்.
பத்ரகாளியாக உருவெடுத்த சிவசக்தி தென் இமயமலையில் அழகிய பெண்ணுருவெடுத்து தேவர்களைக் காக்க பல்வேறு அழகிய ரூபத்தில் வெளிப்பட்டாள். சும்பன், மதி மயங்கி தன் தூதுவனான சுக்ரீவனை தேவியிடம் தன் பெருமைகளைக் கூறி அவனை மணக்க வேண்டுகிறான்.
தேவியோ தன்னுடன் போரிட்டு எவர் தன்னை வெல்கிறார்களோ, அவரைத் தான், தான் மணப்பதென்று உறுதி பூண்டிருப்பதாகக் கூறுகிறாள்.
தேவர்களே அஞ்சி நடுங்கும் தன் தலைவரின் பெருமை புரியாமல் தேவி இப்படிப் பேசுவதாகக் கூறி மிகுந்த கோபத்துடன் சும்ப நிசும்பர்களிடம் தெரிவிக்க திரும்பிச் செல்கிறான்.