அவகோடா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் இத்தனை பயன்களா...!!

செவ்வாய், 21 ஜூன் 2022 (14:28 IST)
அவகோடா பழத்தில் உள்ள வைட்டமின் ஏ நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. மேலும் உடல் உறுதி பெற உதவுகிறது.


அவகோடா பழத்தில் கொழுப்பு அதிகம் ஆனால் இவை எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்டது. இதனை வெண்ணெய் பழம் என்றும் கூறுவார்கள்.

கெட்ட கொழுப்பை குறைக்கும் .நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும். ஆன்டி ஆக்சிடன்டுகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் புண், வீக்கம் போன்றவற்றை குணமாக்க பழுத்த பப்பாளி பழத்துடன் அவகோடா பழங்களையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

சொறி சிரங்கு உள்ளவர்கள் அவகோடா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இப்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயையும் உடம்பில் தேய்த்து வர வேண்டும்.

தோல் நோயால் அவதிப்படுபவர்கள் அவகோடா பழத்திலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யை உடம்பு முழுவதும் நன்கு தேய்த்து குளித்து வர வேண்டும்.

அவகோடா பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் இருக்காது. இந்த பழம் குடல்களை சுத்தப்படுத்தி, கழிவுகளை வெளியேற்றிவிடுவதால் வாய் துர்நாற்றம் அகன்று விடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்