இயற்கை பொருட்களை பயன்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க டிப்ஸ் !!

உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயை மைய அரைத்து முகத்தில் அப்ளை செய்து வட்டப் பாதையில் மசாஜ் செய்யுங்கள். 3-5 நிமிடங்களுக்குச் செய்தால் எண்ணெய்  பிசுக்கு நீங்கும். குளிர்ந்த நீரில் கழுவிவிடுங்கள்.
 
காஃபி பொடி: 1 ஸ்பூன் தயிருடன் காஃபி பொடி கலந்து முகம் முழுவதும் தடவி ஸ்கிரப் செய்யுங்கள். 2 நிமிடங்கள் செய்துவிட்டு 5 நிமிடங்கள் காய வையுங்கள்.  பின் குளிர்ந்த நீரில் கழுவலாம்.
 
ஓட்ஸ்: ஓட்ஸ், தயிர், தேன் மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்கு கலக்குங்கள். பின் முகத்தில் 4 நிமிடங்கள் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அடுத்ததாக 10 நிமிடங்கள் காய வைத்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
 
கிரீன் டீ: கிரீன் டீ பைகளை 2 எடுத்துக்கொள்ளுங்கள். பையை கிழித்து காய்ந்த கிரீன் டீ இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எலுமிச்சை சாறு சில துளிகள், சர்க்கரை 2 ஸ்பூன், சுடு தண்ணீர் சிறிதளவு என எடுத்து கலந்துகொள்ளுங்கள். பின் முகத்தில் அப்ளை செய்து வட்டப்பாதையில் மசாஜ் செய்யுங்கள். 4  நிமிடங்களுக்கு செய்யுங்கள். பின் குளிந்த நீரில் கழுவிவிடுங்கள்.
 
தேன்: தேன் 1 ஸ்பூன் , எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன் மற்றும் பாதாம் கொட்டையை மொறமொறப்பாக அரைத்து மூன்றையும் ஒன்றாகக் கலந்து ஸ்கிரப் செய்யுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். எண்ணெய் பிசுபிசுப்பு அகலும்.
 
ஐஸ்: ஐஸ் நீர் அல்லது ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வர, முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படுவதோடு சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, எண்ணெய் பசை வெளிவருவதைத் தடுக்கலாம்.
 
புதினா: சிறிது புதினா இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து, பின் அதனை காட்டன் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து  எடுக்கலாம். இதுவும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்