சில வகையான மூலிகைகளும் அதன் அற்புத மருத்துவ குணங்களும் !!

நிலவேம்பு: இது காய்ச்சலை அகற்றி நல்ல பசியைக் கொடுக்கும். கடைகளில் விற்கும் நிலவேம்பு குடிநீர் சூரணத்தை வாங்கி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிநீராக்கி குடிக்க சகல சுரங்களும் தீரும்.

நிலாவாரை: நிலாவாரை இலைக்குடிநீரை சொறி, சிரங்கு, படை மீது தடவ அவை ஆறும். நிலாவாரை இலையைத் துவையலாய் அரைத்து இரவில் உண்ண  மலசிக்கல் தீரும்.
 
நீர்பிரமி: இலையை வேக வைத்து அரைத்து மார்பில் கட்டி வர சளி மிகுதியால் வரும் இருமல் குணமாகும். இலையை அரைத்துப் பற்றுப்போட வீக்கம் குறையும். இலைச் சாறுடன் நெய் சேர்த்து பதமாகக் காய்ச்சி 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை கொடுக்க சித்தபிரமை தீரும்.
 
நீர்முள்ளி: நீர்முள்ளி சமூலத்தை இடித்து 200 கிராம் அளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 100 மி.லி வீதம் தினம் 4 வேளை கொடுக்க ஊதிப்பெருத்த உடல் மெலியும். நீர்முள்ளி குடிநீரை குடித்து வர அனைத்து சிறுநீரக நோய்களும் குணமாகும்.
 
நுணா: குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் தீர நுணாச்சாறு - 1 பங்கும், நொச்சி, பொடுதலை, உத்தாமணி ஆகிய மூன்றின் சாறு - 1 பங்கும் கலந்து 3, 4 வேளை 50  துளிக் கணக்கில் 6 மாத குழந்தைக்கு கொடுக்கவும். 1 வயதுக்கும் மேல் 10-30 மி.லி. வரையும் கொடுக்கலாம். இலையை அரைத்துப் பற்றிட இடுப்புவ்லி தீரும்.
 
தூதுவளை: இலைச்சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சி காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மார்புச் சளி நீங்கும். 10 கிராம் பூவை தினமும் காய்ச்சி  பால், சர்க்கரை கூட்டி 40 நாட்கள் பருக உடல் பலம் பெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்