சி.டி.எஸ் சிறப்பு மருத்துவமனையில் ரோபோடிக் முழங்கால் அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு பராமரிப்பில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது
● அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் M.K.மோகன் அவர்களால் அமெரிக்காவின் VELYS நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட எலும்பியல் ரோபோடிக் மூட்டு அறுவை சிகிச்சை இயந்திரத்தை அறிமுகம் செய்யப்பட்டது...
● இந்த ரோபோடிக் இயந்திரம் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு மட்டுமல்லாமல், பிற எலும்பியல் அறுவை சிகிச்சைகளுக்கும், குறிப்பாக இடுப்பு மாற்று மற்றும் மூட்டு மறுசீரமைப்புகளுக்கும் ரோபோடிக் அமைப்பைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை, ஜூன் 22, 2025: சென்னையில் எலும்பியல் அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு பராமரிப்பில் மக்களின் நம்பிக்கை பெற்ற மருத்துவமனை சி.டி.எஸ் சிறப்பு மருத்துவமனை, தற்போது அண்ணா நகரில் ரோபோடிக் உதவியுடன் முழுமையான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை அறிமுகம் செய்துள்ளது. இப்பகுதியில் இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்ட ஒரே மருத்துவமனையாக சி.டி.எஸ் சிறப்பு மருத்துவமனை விளங்குகிறது. இந்த ரோபோடிக் அதிநவீனத்துவம் வாய்ந்தது என்பதனால் அறுவை சிகிச்சையின் துல்லியத்தை உறுதி செய்கிறது, அபாயங்களைக் குறைக்கிறது மற்றும் விரைவான பாதுகாப்பான அறுவை சிகிச்சைக்கு வழிவகுக்கிறது.
அமெரிக்காவின் VELYS என்கிற முன்னணி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோடிக் இயந்திரத்தை, அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் M.K. மோகன், சி.டி.எஸ் சிறப்பு மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.பிரகாஷ் செல்வம் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ராதிகா வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
சி.டி.எஸ் சிறப்பு மருத்துவமனையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சையில் அனுபவமுள்ள எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகாஷ் செல்வம் தலைமையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, ஆர்த்ரோஸ்கோபி, விபத்தில் சிக்கியவருகளுக்கு மூட்டு அறுவை சிகிச்சை, விளையாட்டு வீரர்களின் காயங்கள் மற்றும் மறுவாழ்வு போன்ற பலத்துறை நிபுணர்களின் அணி இயங்குகிறது. அதுமட்டுமில்லாமல் எலும்பியல் பராமரிப்புக்காக 35 சிறப்பு படுக்கைகள் கொண்ட முன்னணி எலும்பியல் பராமரிப்பு மையமும் இதுதான்.
ரோபோடிக் உதவியுடன் முழங்கால் அறுவை சிகிச்சையைப் பற்றி எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகாஷ் செல்வம் கூறியதாவது: மக்களுக்கான மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் எலும்புகள் பராமரிப்பின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வது அல்லது அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். VELYS ரோபோடிக் இயந்திரத்தின் அறுவை சிகிச்சை என்பது ஒரு துல்லியமான அறுவை சிகிச்சை இதனால் திசுக்களின் சேதத்தைக் குறைக்கிறது, இரத்த இழப்பைக் குறைக்கிறது மற்றும் நோயாளிகள் மூட்டு பிரச்சனையிலிருந்து அதிவிரைவில் சரியாவதற்கு பயன்படுகிறது. அறுவை சிகிச்சைகள் மருத்துவரின் திறமையை சார்ந்து இருக்கும் ஆனால், ரோபோடிக் தொழில்நுட்பம் மேம்பட்ட மேப்பிங் மற்றும் நிகழ்நேர தரவுகளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நோயாளியின் தனித்துவமான எலும்புகளின் அமைப்பிற்கு ஏற்றவாறு அறுவை சிகிச்சையைத் தனித்துவம் ஆகிறது. இதனால் நோயாளிகளின் எலும்புகள் மற்றும் மூட்டு சிறந்த முறையில் சீரமைப்பு செய்யப்படுகிறது, அதோடு சேர்த்து நோயாளிகளுக்கு வலியும். நமது பலம், அறுவை சிகிச்சையின் துல்லியம் மட்டுமல்லாமல், முழுமையான முன்-அறுவை திட்டமிடல், தனிப்பட்ட திட்டங்கள் மற்றும் நீண்ட கால மூட்டு ஆரோக்கிய பராமரிப்பு ஆகியவற்றிலும் உள்ளது
CTS சிறப்பு மருத்துவமனை, ரோபோடிக் அறுவை சிகிச்சையை முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமல்லாமல், இடுப்பு மாற்று மற்றும் மூட்டு மறுகட்டமைப்பு போன்ற பிற மூட்டு அறுவை சிகிச்சைகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. ரோபோடிக் உயர்தர துல்லியம், முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமல்லாமல், சிக்கலான இடுப்பு அறுவை சிகிச்சைகள் மற்றும் மறுபரிசீலனை அறுவை சிகிச்சைகளுக்கும் உகந்தது. எதிர்காலத்தில், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப, ஒற்றைப் பகுதி முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை, தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சைகளுக்கும் ரோபோடிக் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த திட்டமிடுகிறோம் என்றார் அவர்.
ரோபோடிக் அறுவை சிகிச்சையில் மருத்துவரின் நிபுணத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து டாக்டர் பிரகாஷ் செல்வம் கூறினார்: ரோபோடிக் தொழில்நுட்பம் முழங்கால் அறுவை சிகிச்சையின் துல்லியத்தையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்துகிறது. ஆனால், வெற்றிகரமான முடிவுகளுக்கு மனித நிபுணத்துவம் இன்றியமையாதது. ரோபோட்கள் முன்-அறுவை திட்டமிடல், துல்லியமான எலும்பு வெட்டுகள் மற்றும் பொருத்துவது மில்லிமீட்டர் துல்லியத்தில் சீரமைக்க உதவுகின்றன. ஆனால், நோயாளியின் உடல் அமைப்பு, மூட்டு நிலை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு முக்கியமான முடிவுகளை எடுப்பது மருத்துவரே. ஒவ்வொரு நோயாளியும் தனித்துவமான சவால்களைக் முன் வைக்கின்றனர். இவற்றை சமாளிக்கும் திறன், உடனடி முடிவெடுக்கும் திறன் மற்றும் அனுபவம் ஆகியவை எந்த இயந்திரத்தாலும் மாற்ற முடியாதவை. பொருத்தமான உள்வைப்பைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து எதிர்பாராத உள்-அறுவை சிகிச்சை கண்டுபிடிப்புகளை நிர்வகிப்பது வரை, தொழில்நுட்பம் அதன் முழு திறனையும் வழங்குவதை உறுதி செய்வது அறுவை சிகிச்சை நிபுணர்களின் திறமையாகும்.