இந்த ஆசனத்தில் மேரு தண்டம் போன்ற முதுகெலும்பே வில்லாக வளைக்கப்பட்டு, கால்களும், கைகளும் நான் கயிறுகளாக பூட்டப்பட்டுள்ளன.
பலன்கள்:
முதுகெலும்பின் வழியாக ஓடும் அத்தனை நாடி நரம்புகளுக்கும் புது ரத்தம் செலுத்தப்பட்டு உறுதி அடைகிறது. இரைப்பை, குடல்களிலுள்ள அழுக்குகள் வெளியேறும். ஜீரண சக்தி அதிகப்படும். சோம்பல் ஒழியும். கபம் வெளியேறும். தொந்தி கரையும், மார்பு விரியும், இளமைத்துடிப்பு அதிகரிக்கும்.
அஜீரணம், வயிற்று வலி, வாய் துர்நாற்றம், தொந்தி, வயிற்ருக் கொழுப்பு, ஊளைச்சதை நீங்கும். பாங்கிரியாஸ் மற்றும் சிறுநீர்க் கருவிகள் நன்கு வேலை செய்யும். ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும். பெண்களின் கர்ப்பப்பை பலப்படும். மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள் தீரும். இளமைப் பொலிவு உண்டாகும்.