வெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்குவதால் என்ன பயன்கள்...?

வெங்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், இதய ஆரோக்கியம் மேம்படும். முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாம். மேலும் கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்கும்.

முக்கியமாக வயிற்றுப் பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சனைகள், குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகும்.
 
சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுவராயின், வெங்காயத்தை இரவில் படுக்கும்போது உள்ளங்கால்களில் வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகும்.
 
இரவில் படுக்கும்போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவதால் உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது.
 
வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது சருமத்தின் வழியே ஊடுருவி இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு பாக்டீரியாக்களை  அழிக்கும்.
 
வெங்காயத்தில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் அதிகம் உள்ளது. எனவே இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை  அழித்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்