ஏப்பம் அடிக்கடி வருபவர்களுக்கு கொத்தமல்லி ஒரு அருமருந்தாகின்றது. உற்சாகத்தை தரக் கூடியது. கருவுற்ற பெண்களிற்கு கொத்தமல்லியுடன் பெருஞ்சீரகம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு பனைவெல்லம் சேர்த்து கொடுத்தால் கை கால்களில் வீக்கம், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உடலில் ஏற்படுகின்ற நீரேற்றம் என்பவை குறையக் கூடிய நிலை ஏற்படும்.
இரத்தம் கலந்த சிறுநீர், சிறுநீர் எரிச்சல் இரண்டிற்கும் பனைவெல்லத்துடன் கூடிய தேநீர் சிறந்தது. இரத்தம் கலந்து வருவது நின்று விடும். கொத்தமல்லியை பொடியாக்கி பன்னீருடன் கலந்து பூசும் போது முகச்சுருக்கம் போகும்.
ஒரு பாத்திமொன்றை அடுப்பில் வைத்து அதில் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்றாக வறுக்கவும். கருக விடக்கூடாது. பொன்னிறமாக வரும். கைகளினால் அழுத்திப் பார்த்தால் வறுத்த விதை உடையும். அது தான் பதம். பின்பு சுக்கையும் தனியாக வறுத்து எடுக்கவும். மிளகு, சீரகமும் வறுத்துப் போடவும். எல்லாவற்றையும் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து எடுத்து, தேநீர் செய்து குடிக்கலாம்.