பப்பாளி விதையின் பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள் !!

பப்பாளி விதையை வெயிலில் நன்கு காய வைத்து கொள்ள வேண்டும். அதை நன்கு பொடி ஆக்க வேண்டும். பொடியை சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக்கொள்ளலாம். ஒரு மாதம் வரை இந்த பொடி கெடாமல் இருக்கும்.  

தினமும் தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். இந்த பொடியை பிரிட்ஜ்ல் வைத்தும் பயன்படுத்தலாம். பப்பாளி விதை தினமும் கிடைப்பவர்கள் அதை பச்சையாகவே  சாப்பிடலாம்.
 
பப்பாளி விதையை நன்கு அரைத்து வைத்து கொள்ள வேண்டும். அதை சிறிது அளவு எலும்பிச்சை சாறுடன் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் சிரோசிஸ் என்னும்  நோய் வராமல் தடுக்கலாம்.
 
பப்பாளி விதையின் பொடியை உணவில் கலந்தும் சாப்பிடலாம். தினமும் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். பப்பாளி விதை 4-5 பொடி செய்து சிறிது  அளவு தேன் கலந்தும் சாப்பிடலாம். 
 
தினமும் 8-10 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பப்பாளி விதையினை நன்கு தண்ணீரில் 10 நிமிடம் கொதிக்க வைத்து பின்பு அதை ஆற வைத்து குடித்தால்  கல்  வராமல் தடுக்கலாம்.
 
பப்பாளி விதையினை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட வேண்டும். விதை இல்லாதவர்கள் பொடியை நீரில் கலந்து குடித்தால் புழு இறந்து விடும். அல்லது இனிப்பு சாப்பிட்டவுடன் 4-5 விதையை நன்கு மென்று முழுங்க வேண்டும்.
 
பப்பாளி விதை பொடியினை  தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலையில்  30 நிமிடம் ஊற வைத்து நன்கு அலசி குளிக்க வேண்டும்.  முடி அடர்த்தியாக வளரும்.  மேலும் விதையில் உள்ள ஒலீயிக் ஆசிட்  பொடுகு வராமல் தடுக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்