தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொண்டர்கள் மாலை அணிவித்துக்கொண்டிருந்தனர். அப்போது கெஜ்ரிவாலுக்கு மாலை அணிவித்த லாலி என்னும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் யாரும் எதிர்பாராத விதத்தில், 'பளார்' என்று கெஜ்ரிவால் கன்னத்தில் அடித்துவிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக முழுமூச்சாக வாக்கு சேர்ந்து வரும் கெஜ்ரிவால் இப்படி தாக்கப்படுவது புதிது இல்லை. சமீபத்தில் தட்சிணபுரி பகுதியில் பிரச்சாரம் செய்தப்போது ஒரு நபர் கெஜ்ரிவாலை முதுகில் குத்தினார். இதே போல கடந்த மாதம் கெஜ்ரிவால் மீது கருப்பு மை, முட்டை போன்றவை வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.