சுமார் 3 அடி ஆழம் தோண்டிய போது, ஒரு பெரிய பொருள் இருப்பதை உணர்ந்தனர். அங்கு 4 அடி நீளத்தில் இருந்த வெடிகுண்டு புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வெடிகுண்டினை கைப்பற்றி பத்திரமாக கொண்டு சென்றனர்.
தொடர்ந்து அக்குண்டு ஆய்வு செய்யப்பட்டபோது, இது இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்று தெரியவந்தது. இது 450 கிலோ எடையிருந்ததாகக் கூறப்படுகின்றது. இது 1933ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. இந்த வெடிகுண்டை அருகாமையில் உள்ள துத்குன்டி காட்டில் செயலிழக்க வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.