ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த லாலு ராமுடன் காதல் ஏற்பட்டு, அவருடன் ஒன்றாக சேர்ந்து வாழ தொடங்கினார்.
அங்கு இருவரையும் மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்து அடித்து, இரண்டு நாட்கள் சித்திரவதை செய்துள்ளனர். இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய மாவட்ட நிர்வாகம் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்காத கிராம தலைவர் மற்றும் ஒரு காவல் துறை அதிகாரியை பதவி நீக்கம் செய்தனர்.