கரப்பான்பூச்சியை காட்டி கட்டாய உடலுறவு: கணவன் மீது மனைவி பரபரப்பு புகார்!

சனி, 21 ஜனவரி 2017 (13:04 IST)
பெங்களூரில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியை கரப்பான்பூச்சியை காட்டி மிரட்டி கட்டாய உடலுறவு செய்ததாக காவல்நிலையத்தில் புகர் அளிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


 


பெங்களூரு இந்திரா நகரில் வசித்து வருகின்றனர் அவினாஷ் சர்மா, சுஜாதா தம்பதியினர். திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆன இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அவினாஷ் சர்மாவுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது அவரது மனைவி சுஜாதாவுக்கு தெரிய வர அன்றில் இருந்து அவருடன் உடலுறவில் ஈடுபட மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் சுஜாதா இந்திரா நகர் காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர் கரப்பான்பூச்சியை காட்டி தன்னை மிரட்டி கட்டாய உடலுறவில் ஈடுபடுவதாக புகார் அளித்துள்ளார். சுஜாதாவிற்கு கரப்பான்பூச்சி போபியா இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவரது கணவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக போலீசார் கூறியுள்ளனர்.
 
இதனையடுத்து சுஜாதா தனக்கு கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என கேட்டும் அதற்கு அவினாஷ் சர்மா மறுத்துள்ளார். இதனையடுத்து இவர்களின் புகார்களை புகாரை கொண்டு பெண்கள் ஆலோசனை மையத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து இருவருக்கும் தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்