முன்னாள் காதலனை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க முயன்ற பெண் கைது!

செவ்வாய், 26 டிசம்பர் 2023 (19:36 IST)
முன்னாள் காதலனை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஹைதராபாத் பகுதியில் முன்னாள் காதலனை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க  நண்பர்களின் உதவியுடன் திட்டம் தீட்டிய இளம்பபெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலர்களாக இருந்த ரிங்கி ஷ்ரவன் இருவரும் சமீபத்தில் பிரிந்தனர். இந்த நிலையில், ஷ்ரவனை வரவழைத்த காதலி ரிஜ்ங்கி, அவரது காரில் கஞ்சாவை வைத்து, போலிஸுக்கும் தகவல் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியத்தில் உண்மை தெரிய வந்தது. எனவே ரிங்கி மற்றும் அவருக்கு உதவிய  பேர் கைது செய்யப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்