நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அருண் ஜெட்லி, பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு சிறப்பு சிறு சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும், பெண் குழந்தைகளின் வாழ்க்கை தரம் உயர்வதற்காகவும், அவர்களது மேம்பாட்டிற்காகவும் சிறப்பு சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 4 விழுக்காடு வட்டியில் கடன் 100 மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்படும் எனக் குறிப்பிட்ட அவர், பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியதுவம் அளிக்கும் வகையில், பொது போக்குவரத்தில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.