விசாகப்பட்டினத்தில், பயோ டீசல் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு நாட்களாக தீ கொளுந்து விட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள பயோமெக்ஸ் என்ற எரிபொருள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் நேற்று ஏற்பட்ட தீ வித்தில், ஆலை தீப்பற்றிக் கொண்டது.
மேலும், விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மாநில அமைச்சர் சீனிவாச ராவ், தீ விபத்தில் தொழிலாளர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், தீ விபத்தால் ரூபாய் 120 கோடி வரை சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.