அந்த விழாவில் நடிகர் விக்ரமும் கலந்து கொண்டார். அவர் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது, திடீரென ஒரு மாற்றுத்திறனாளி ரசிகர் ஓடிவந்து அவரை கட்டி அணைத்துக் கொண்டார். விக்ரம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அருகிலிருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகரை பிடித்து இழுத்து அங்கிருந்து விரட்டினர்.
ஆனால் விக்ரமை அவரை ஒன்றும் செய்யவேண்டாம் என்று கூறி, அந்த ரசிகரை அழைத்து போட்டோ எடுத்துக்கொண்டார். மேலும் அந்த ரசிகர் விக்ரமின் கன்னத்தில் முத்தமும் கொடுத்து அவரை கட்டிக் கொண்டார். விக்ரமும் கோபப்படாமல் அவரை அரவணைத்துக் கொண்டார்.