நான் அரசியல் பேச மாட்டேன்: வெங்கையா நாயுடு அதிரடி!!

புதன், 9 ஆகஸ்ட் 2017 (15:47 IST)
துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பின், இந்த பொறுப்பில் இருந்து கொண்டு அரசியல் பேசக்கூடாது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 


 
 
ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த  வெங்கையா நாயுடு, பின்வருமாறு கூறினார், துணை ஜனாதிபதி பொறுப்பில் இருந்து கொண்டு நான் அரசியல் பேசக்கூடாது. நான் அரசியல் பேசப்போவதும் இல்லை. 
 
ஆனால், நான் அரசியல் பேச மாட்டேன் என்பதால், மக்கள் பிரச்சினைகளுக்கோ மக்கள் நலனுக்காகவோ குரல் கொடுக்க மாட்டேன் என்று அர்த்தம் இல்லை என தனது புதிய பதவியினை பற்றி தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்