முதல் நாள் வேலைக்கு சென்ற பெண் தூக்கில் தொங்கிய சம்பவம்! – உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

ஞாயிறு, 1 மே 2022 (15:15 IST)
உத்தர பிரதேசத்தில் புதிதாக கட்டிய மருத்துவமனைக்கு முதல் நாள் வேலைக்கு சென்ற இளம்பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள துல்லாபூர்வா கிராமத்தில் நியூ ஜீவன் என்ற மருத்துவமனை கடந்த 25ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் திகானா கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் நர்ஸ் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பணியில் சேர்ந்த அவர் அன்றிரவு மருத்துவமனையிலேயே தங்கியுள்ளார். அடுத்தநாள் காலை மருத்துவமனையின் பின்புறம் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீஸார் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்