உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவரான முதலாயம் சிங் யாதவ் தனது மைன்புரி தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 11 பேர் ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து 1 எம்.பி. தொகுதிக்கும், 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (16 ஆம் தேதி) நடந்தது. இதில் 11 சட்டமன்ற தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 8 இடங்களிலும், பா.ஜ.க. 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ''உத்தரப் பிரதேச மக்கள் மதவாத சக்திகளுக்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளனர். அவர்கள் நல்லிணக்கும் மற்றும் சகோதரத்துவம் வேண்டும் என்ற எண்ணத்தை வெளிக்காட்டியுள்ளனர். மதவாத சக்திகளை தோற்கடித்த மாநில மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.