உத்திரப்பிரதேச மாநிலம் தாத்ரி மாவட்டத்தில் உள்ள பிசடா கிராமத்தில் வசித்து வந்தவர் அக்லாப். கடந்த திங்கள் கிழமை அக்லாப்பின் வீட்டில் பசுமாட்டிறைச்சி சமைக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதனால் வெகுண்டெழுந்த பிசடா கிராம மக்கள் , அக்லாப்பின் வீட்டுக்குள் புகுந்து அவரை அடித்துக் கொலை செய்தனர்.
இந்த தாக்குதலில் அக்லாப்பின் மகன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு துணை ராணுவப்படையினர் முகாமிட்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அக்லாப்பின் வீட்டில் மாட்டிறைச்சி சமைக்கப்பட்டதாக வெளியான தகவல் புரளி என்பது தெரியவந்தது.