சாலையில் சென்ற மூதாட்டியை தாக்கிய பன்றிகள் (வீடியோ)

சனி, 19 ஆகஸ்ட் 2017 (17:01 IST)
ஆந்திரா மாநிலத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி ஒருவரை இரண்டு பன்றிகள் சேர்ந்து தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆந்திரா மாநிலம் நெல்லூரில் உள்ள சாலையில் 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது மூதாட்டியை நோக்கி வந்த இரண்டு பன்றிகள் அவர் மீது தாக்குதலில் ஈடுப்பட்டன. இதனால் மூதாட்டி கீழே விழுந்தார். அவரை விடாமல் பன்றிகள் தொடர்ந்து தாக்குயுள்ளது. 
 
இதையடுத்து சாலையில் சென்ற பொதுமக்கள் பன்றிகளை கற்களால் அடித்து விரட்டி மூதாட்டியை காப்பாறினர். பன்றிகள் தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

நன்றி: V6 News Telugu

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்