புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், அங்கிருந்த பாதுகாவலர் கஜோர் 4 ஆயிரத்து 200 கிலோ வெங்காயத்தை திருடி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்ட வெங்காய மூட்டைகளை மீட்ட காவல்துறையினர், பதுக்கலுக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இதே போல் அதிகளவில் மகாரஷ்ட்டிரா மாநிலத்தில் வெங்காயம் திருடு போவதால் அங்குள்ள மொத்த கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், வெங்காயம் வைத்திருப்போர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என காவல் துறையினர் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.